பதிய காவல்துறைமா அதிபராக சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
காவல்துறைமா அதிபர் பதவி நிலையில் காணப்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் சீ.டி.விக்ரமரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற பேரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதுதவிர ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை